கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசாணை விவரம் வெளியீடு

தமிழகத்தில் 19 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றும் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:44 pm

DIN

தமிழகத்தின் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

திருவண்ணாமலை, சேலம், சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் பல துறைகளுக்கு புதிய செயலர்களும் நியமிக்கப்பட்டனர்.

இதில், பள்ளிகல்வித்துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு முதன்மை செயலர் என்ற புதிய பொறுப்பும் உருவாக்கப்பட்டது.

தமிழக பள்ளிகல்வித்துறை புதிய முதன்மைச் செயலராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே செயலராக இருந்த உதயசந்திரன் பாடதிட்டத்துக்கு மட்டும் பொறுப்பு வகிப்பார். 

தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் முதன்மைச் செயலராக எல்காட் மேலாண்மை இயக்குநர் ராஜேந்திரகுமார் மாற்றம். 

காதி மற்றும் கிராம உத்யோக் பவன் மேலாண்மை இயக்குநர் சுடலை கண்ணன் - எல்காட் தலைவராக நியமனம்.

தாட்கோ முதன்மை செயலர் குமார் ஜெயந்த் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலராக மாற்றம். 

கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் துணை செயலர் பழனிசாமி - பேரூராட்சிகள் இயக்குநராக நியமினம். ஐஏஎஸ் தொழில்நுட்ப கல்வியின் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் முதன்மை செயலர் கோபால் - கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலராக மாற்றம். 

சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் சுதா தேவி - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநராக மாற்றம். 

தமிழ்நாடு விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் அசோக் டோங்ரே - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரிய முதன்மை செயலராக மாற்றம்.

தொழிற்சாலை மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் ஆணையர் ரீடா ஹரிஷ் தாக்கர் - தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளராக நியமனம். 

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவராக அண்ணாமலை நியமனம். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக இயக்குநர் ராஜேந்திர ரத்னு - பேரிடர் மேலாண்மை ஆணையராக மாற்றம். 

மாவட்ட முகமை திட்ட அலுவலர் ரோகினி - சேலம் மாவட்ட ஆட்சியராக மாற்றம். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பத் - சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக மாற்றம். 

பேரிடர் மேலாண்மை இயக்குனர் லதா - சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மாற்றம். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி - தமிழக உள்துறை, கலால் துறையின் துணைச் செயலராக நியமினம்.

சென்னை மாநகராட்சி கல்வித்துறை துணை ஆணையர் கந்தசாமி - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாத் வாட்நீரே - கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமினம். 

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேஷ் - தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக கூடுதல் ஆணையராக நியமினம். 

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.