குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குட்கா விவகாரம்: ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு பேரவை உரிமைக் குழு நோட்டீஸ்

தமிழக சட்டப் பேரவையில் குட்காவைக் காண்பித்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 பேர் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

News image
சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் திங்கள்கிழமை நடைபெற்ற அவை உரிமை மீறல் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வெளியே வந்த திமுக உறுப்பினர்கள் மதிவாணன், பெரிய கருப்பன், ரகுபதி, சுந்தர், ரவிச்சந்திரன்.
Updated On :28 ஆகஸ்ட் 2017, 10:01 pm

DIN

தமிழக சட்டப் பேரவையில் குட்காவைக் காண்பித்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 பேர் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான கடந்த ஜூலை 19-ஆம் தேதி பொதுத் துறை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அவற்றை பேரவையில் எடுத்துக் காண்பித்தார். அவருடன் திமுக உறுப்பினர்கள் சிலரும் தங்களிடம் இருந்த பாக்கெட்டுகளை வெளியே எடுத்து பேரவையில் காட்டினர்.
பேரவை உரிமைக் குழு: தடை செய்யப்பட்ட பொருள்களை சட்டப் பேரவையில் காட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீதான பிரச்னை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தப் பிரச்னை அவை உரிமைக் குழுக் கூட்டத்தில் திங்கள்கிழமை விவாதிக்கப்பட்டது. இதற்காக உரிமை மீறல் குழுக் கூட்டம் அதன் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் மாலை 5 மணிக்குத் தொடங்கியது.
21 பேருக்கு நோட்டீஸ்: கூட்டத்தில், அதிமுக சார்பில் அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன், எம்.கீதா, எஸ்.எஸ்.சரவணன், எம்.பரமேஸ்வரி, ஆர்.மருதமுத்து,ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எஸ்.டி.கே.ஜக்கையன், ஆர்.தங்கதுரை, டி..ஏ.ஏழுமலை ஆகிய மூன்று பேர் பங்கேற்கவில்லை.
திமுகவைச் சேர்ந்த கே.சுந்தர், கே.ஆர்.பெரியகருப்பன், மதிவாணன், ரகுபதி, காங்கிரஸ் சார்பில் விஜயதரணி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.,க்கள் ஒருவார காலத்துக்குள் பிரச்னை தொடர்பாக பதிலளிக்குமாறு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.