புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கருணாஸ், தமிமுன், தனியரசு எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு என்ன?

அதிமுக தோழமைக் கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், தமிமுன், தனியரசு சென்று இன்று தங்களின் நிலைப்பாடு குறித்து கூட்டாகப் பேட்டி

News image
Updated On :29 ஆகஸ்ட் 2017, 6:55 am

DIN

சென்னை: அதிமுக தோழமைக் கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், தமிமுன், தனியரசு சென்னையில் இன்று தங்களின் நிலைப்பாடு குறித்து கூட்டாகப் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிமுன் அன்சாரி:  அதிமுகவை பிளவுபடுத்தி அழிக்கும் வேலையை பாஜக செய்துவருவதாக குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது என்று கூறினார்.

தனியரசு: பேரறிவாளனுக்கு பரோல் வழங்கிய முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த தனியரசு, தினகரனை அழைத்து முதல்வர் பழனிசாமி பேச வேண்டும். அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில், கட்சியில் இடமளிக்க வேண்டும். பாஜகவின் அழுத்தத்திற்கும், சூழ்ச்சிக்கும் அதிமுக இரையாகி விடக்கூடாது என்றும் சசிகலாவை நீக்கும் பாஜக செய்யும் சூழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி இரையாகக் கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நிலைமை கருதி முடிவெடுப்போம். என்று தனியரசு கூறியுள்ளார்.

கருணாஸ்: ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் என்று தெரிவித்த கருணாஸ், ஓ.பி.எஸ் அணியை அழைத்துக் கொண்ட எடப்பாடி அரசு, தினகரன் தரப்பை நீக்குவது சரியான முடிவு அல்ல. சசிகலா, தினகரனை நீக்குவது என்பது சரியான முடிவல்ல என்று தெரிவித்தார்.

மேலும், பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகி விடக்கூடாது. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதை உணர்ந்து தினகரன் அணியினருடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பன்னீர்செல்வத்துக்கு கொடுத்த மரியாதையை தினகரனுக்கும் அளிக்க வேண்டும். பொதுச்செயலாளரான சசிகலாவை நீக்கிடும் முடிவு பின்னடைவை ஏற்படுத்திடும். மத்திய அரசின் சூழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி அரசு இடம் அளித்துவிடக் கூடாது என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.