விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதிய அரசியல் வியூகத்தைத் தொடங்கியது எடப்பாடி அணி

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுகள் அடங்கிய சிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2017, 12:03 pm


சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுகள் அடங்கிய சிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் விகே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் பற்றி ஜெயலலிதா பேசிய உரைகள் அடங்கியுள்ளன.

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று இரண்டு சிடிக்களை வெளியிட்டார். அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய விடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு சிடியில், 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சித் தலைவர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசிய உரை அடங்கியுள்ளது. அப்போது, வி.கே. சசிகலாவும், அவரது குடும்பத்தாரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். அது குறித்து ஜெயலலிதா அந்த உரையில் மறைமுகமாகப் பேசியிருந்தார்.

இரண்டு சிடிக்களையும் வெளியிட்டுப் பேசிய உதயகுமார், கட்சியைப் பிரிக்க நினைக்கும் யாரையும் அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.