ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

புதுவையில் ஜனவரி 25-இல் சர்வதேச பாய்மரப் படகுப் போட்டி

புதுவையில் சர்வதேச அளவிலான பாய்மரப் படகுப் போட்டி ஜனவரி 25-இல் தொடங்குகிறது. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 8:05 pm

DIN

புதுவையில் சர்வதேச அளவிலான பாய்மரப் படகுப் போட்டி ஜனவரி 25-இல் தொடங்குகிறது. 
இது தொடர்பாக, புதுவை பிரெஞ்சு துணைத் தூதரக அலுவலகத்தில் முதல்வர் வி.நாராயணசாமி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
பிரெஞ்சு அரசின் நிதி உதவியுடன், புதுச்சேரி சுற்றுலாத் துறை இணைந்து வருகிற ஜனவரி 25 முதல் 28-ஆம் தேதி வரை சர்வதேச அளவிலான பாய்மரப் படகுப் போட்டியை நடத்துகிறது. போன்சூர் இந்தியா திட்டத்தின்கீழ், கலை, கலாசார நிகழ்ச்சிகளுடன் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது. பிரான்சிலிருந்து ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட 10 வீரர்களும், இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள். 
புதுச்சேரியின் பாய்மர படகுப் பயிற்சியாளர் அமைப்பும், பிரெஞ்சு தேச பாய்மரப் படகுப் பயிற்சியாளர்கள் அமைப்பும் இணைந்து இந்தப் போட்டியை நடத்த உள்ளன. 
முந்தைய காலத்தில் நமது நாட்டு வணிகர்கள் கடல் மார்க்கமாக பாய்மரப் படகில் அயல் நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்துள்ளனர். புதுவை அரிக்கன்மேடு பகுதியில், கிரேக்க தேசத்தோடு நாம் வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அயல் நாடுகளில் பிரபலமான பாய்மரப் படகுப் போட்டிகள், இந்தியாவில் பிரபலமாகவில்லை. 
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு விருதுகள் வழங்கப்படும். இதன் மூலம், புதுவையின் சுற்றுலா பெருமை மேம்படுவதோடு, பிரெஞ்சு நாட்டுடனான நட்பும் பலமாகும். பொலிவுறு நகரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் பிரெஞ்சு அரசு உதவி வருகிறது என்றார் முதல்வர் நாராயணசாமி. 
துணைத் தூதர் கேத்தரின் ஸ்வாட், சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏ க.லட்சுமிநாராயணன், சுற்றுலாத் துறை இயக்குநர் முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.