கிருஷ்ணா நதிநீர் விவகாரம்: நாளை ஆந்திரா சென்று பேச்சு வார்த்தை நடத்தும் முதல்வர்! 

தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் திறந்து விடுவது குறித்து பேசுவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆந்திரா செல்கிறார்.
கிருஷ்ணா நதிநீர் விவகாரம்: நாளை ஆந்திரா சென்று பேச்சு வார்த்தை நடத்தும் முதல்வர்! 

சென்னை: தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் திறந்து விடுவது குறித்து பேசுவதற்காக முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் நாளை ஆந்திரா செல்கிறார்.

பருவமழை பொய்த்து விட்டதன் காரணமாக தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீரை திறந்து விடுமாறு தமிழக  அரசு கோரிக்கை வைத்துள்ளது.

எனவே அது குறித்து பேச்சுவார்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆந்திரா செல்ல உள்ளார்.

நதிநீர் விவகாரம் குறித்து பேச்சு வார்தை நடத்தும் பொருட்டு தமிழக முதலவர் ஒருவர் ஆந்திரா செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com