மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: தலையிட மறுத்தது உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி சென்னையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தற்போது தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. 

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:47 am

DIN

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி சென்னையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தற்போது தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. 

உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக தமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தற்பொழுது ஜலல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.  தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூன்று நாட்களாக போராடிவருகின்றனர். 

இந்நிலையில் இந்த போராட்டங்கள் தொடர்பான விஷயங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வின் கவனத்திற்கு வழக்கறிஞர் பாலு கொண்டு வந்தார்.

அப்பொழுது அவர், 'மெரினா கடற்கரையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் இருந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் போராட்டக்காரர்களுக்கு குடிநீர் கூட வழங்கப்படாதது உள்ளிட்ட விவகாரங்களை எடுத்துக் கூறினார்.

ஆனால் நீதிபதிகளின் அமர்வானது தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலிருப்பதால் இதில் தற்போது தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.