டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அயராது உழைத்தால் விரும்பும் இடத்தை பெற முடியும்: இளையராஜா

மாணவர்கள் அயராது உழைத்தால் விரும்பும் இடத்தைக் கண்டிப்பாகப் பெற முடியும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

News image
சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கட்டணமில்லா பொறியியல் கல்விக்கான ஆணையை பெற்ற பொறியியல் மாணவர்களுடன் இசையமைப்பாளர் இளையராஜா,திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி,
Updated On :29 ஜனவரி 2024, 4:24 pm

DIN

மாணவர்கள் அயராது உழைத்தால் விரும்பும் இடத்தைக் கண்டிப்பாகப் பெற முடியும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சாய்ராம் கல்விக்குழும நிறுவனர் லியோமுத்து நினைவேந்தல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 40 மாணவர்களுக்கு எவ்விதக் கட்டணமும் பெறாமல் இலவச பொறியியல் படிப்பு வழங்கும் ஆணையை வழங்கி அவர் மேலும் பேசியது:
மாணவர்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் நிறைய சாதியுங்கள். சாதிக்க நினைப்பவர்கள் வெறும் கனவு கண்டு கொண்டு இருந்தால் மட்டும் போதாது. கனவு காண்பதை விட்டுவிட்டு நீங்கள் சாதிக்க விரும்பும் துறையில் முழு முயற்சியுடன் ஈடுபடுங்கள். அல்லும் பகலும் அயராது உழைத்தால் நீங்கள் விரும்பும் இடத்தைப் பெற முடியும் என்றார் அவர்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, சாய்ராம் கல்விக்குழுமத் தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, முதன்மைச் செயல் அலுவலர் சாய் பிரகாஷ் லியோ முத்து, அறங்காவலர் ஷர்மிளா ராஜா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.