ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

என்,எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 26 நாள் பணி நாட்கள் வழங்ககோரி நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :29 ஜூலை 2017, 7:17 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலி: என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 26 நாள் பணி நாட்கள் வழங்ககோரி நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1-A பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் மாதாந்திர பணி நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக என்.எல்.சி நிர்வாகம் குறைத்தது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநாட்கள் குறைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூலை 12-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அன்மையில், என்.எல்.சி நிர்வாகம் நெய்வேலி தொழிலக பகுதி, தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறுவதற்குத் தடை உத்தரவு பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் தொழிலாளர் துணை ஆணையர் கனேஷன் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து சனிக்கிழமை காலை நெய்வேலி ஆர்ச் கேட் எதிரே எ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச்செயலர் எம்.சேகர் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது மாவட்ட பொதுச்செயலர் எம்.சேகர் கூறுகையில்,
தொழிலாளர்களுக்கு 26 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கட்கிழமை வடலூர் நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.