டி.டி.வி.தினகரன் எப்படி கட்சி பணிகளை தொடருவார்? ஓ.பன்னீர்செல்வம் சாடல்!
டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதே செல்லாது என்று நாங்கள் கூறும் பொழுது, அவர் எப்படி கட்சி பணிகளை தொடர முடியும் ..


பெரம்பலூர்: டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதே செல்லாது என்று நாங்கள் கூறும் பொழுது, அவர் எப்படி கட்சி பணிகளை தொடர முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்காக, முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் வந்திருந்த அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதே அதிமுக விதிகளின்படி தவறு என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அப்படி இருக்கும் போது அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் எப்படி கட்சி நிர்வாகியாக இருப்பார்?
அந்த நிலையில் அவர் எப்படி கட்சி பணிகளை தொடர முடியும். அவர் கட்சி பணிகளை தொடர முடியுமா என்பதைப் பற்றி அதிமுகவின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணையும் முயற்சியை சிலர் தங்களது தேவையில்லாத பேச்சின் காரணமாக கெடுத்து விட்டார்கள் என்று சென்னையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...