இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

 ப்ளஸ் டூ தேர்வு முடிந்தவுடன் 'நீட்' தேர்வு நடத்தாதது ஏன்? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வு முடிந்தவுடனேயே 'நீட்' தேர்வு நடத்தாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:42 pm

DIN

மதுரை: மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வு முடிந்தவுடனேயே 'நீட்' தேர்வு நடத்தாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுடன் நீட் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து கொள்ள வேண்டுமென்று கோரி, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் வருமாறு:

தமிழகத்தில் மாணவர்களுக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிந்தவுடனேயே 'நீட்' தேர்வு நடத்தாமல், மூன்று மாதங்கள் தாமதமாக நடத்துவது ஏன்? மாணவர்களுக்கு நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் இல்லாத நிலையில், எவ்வாறு ஒரு பொதுத்தேர்வு நடத்த இயலும்? தற்பொழுது நடத்தப்பட்டுள்ள நீட் தேர்வில்  சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் அதிக அளவில் கேள்விகள் இடம்பெற்றுள்ளது ஏன்?

இவ்வாறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் வழக்கினை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.