14 -இல் ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னையில் புதன்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது.


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னையில் புதன்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதிமுக தொண்டர்கள் முழுமையாக எங்கள் பக்கம்தான் உள்ளனர்.
அணிகள் இணைப்பு தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அணி ஆக்கப்பூர்வ கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை. அதனால்தான் பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டது.
அதிமுக சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ள நிலையில், அவைத் தலைவர், பொருளாளர் தான் கட்சியை வழி நடத்த வேண்டும். இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் உள்ளது. அதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
எங்கள் அணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெறும். அதில், சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து விவாதிக்க உள்ளோம். அரசின் தவறுகளைப் பேரவையில் சுட்டிக்காட்டுவோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...