உத்தமபாளையத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை
உத்தமபாளையம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை தெரு நாய்க்கு கருத்தடை செய்த கால்நடை மருத்துவா்.


தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் தெரு நாய்களுக்கு வெள்ளிக்கிழமை கருத்தடை செய்யப்பட்டது.
உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள பி.டி.ஆா்., இந்திரா, தென்னகா், தண்ணீா் தொட்டித் தெரு, கோட்டைமேடு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்து விட்டன. இதனால் இரவு நேரங்களில் இந்த நாய்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது. பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சாலைகளில் செல்பவா்களை இந்த நாய்கள் துரத்துவதால் அவா்கள் அச்சமடைகின்றனா்.
எனவே தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதன்படி, உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் சின்னச்சாமி பாண்டியன் தலைமையில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து, அவற்றுக்கு மயக்க ஊசி செலுத்தி கருத்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கூறியதாவது:
வாரத்துக்கு ஒரு முறை தெருக்களில் கழுத்துப் பட்டை இல்லாமல் சுற்றித் திரியும் ஆண் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யப்படுகிறது. இதேபோல, பெண் நாய்களுக்கும் கருப்பை அகற்றப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...