பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வடலூர் பேரூராட்சி அலுவலகம் பூட்டுப்போடும் போராட்டம்

வடலூர் பேரூராட்சியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக் கோரி வடலூர் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பேரவையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :16 ஜூன் 2017, 6:28 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

வடலூர் பேரூராட்சியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக் கோரி வடலூர் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பேரவையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்நிலையில் இன்று பேரூர் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாததைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தைப் பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

இப்போராட்டத்திற்கு நுகர்வோர் சங்கத்தலைவர் கல்விராயன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்குப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அழைத்துச் சென்றனர். இதில், மாவட்ட சார் ஆட்சியர் ஜானி தாம் வர்கீஸ் பங்கேற்க உள்ளதாகத் தெரிய வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.