மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

News image
Updated On :17 ஜூன் 2017, 4:41 am

DIN

சென்னை: சென்னை தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணியின் போது ஊழியர் ஒருவர் உயிரிழந்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இடிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இடிப்புப் பணிகள் தொடர்ந்து 9- ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ஜா கட்டர் இயந்திரம் விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், இடிப்புப் பணிகள் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டன. எந்தப் பணியும் நடக்காததால் ஏற்கெனவே இடிக்கப்பட்ட கட்டடக்கழிவுகள் அப்பகுதியில் 30 அடிக்கு மேலாக தேக்கமடைந்தது.

இடிப்புப் பணியின்போது ஊழியர் ஒருவர் உயிரிழந்ததால், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

உயிரிழந்த ஊழியருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசுக் குழு மாலையில் ஆய்வு மேற்கொண்டது.

இடிக்கும் பணிகள் குறித்து சென்னை சில்க்ஸ் நிர்வாகம், இடிப்புப் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தியது.

திங்கள்கிழமை முதல் மீண்டும் பணிகள் தொடங்கப்படும். தற்போது தேங்கியுள்ள கட்டடக் கழிவுகள் ஓரிரு நாள்களில் அகற்றப்பட்டு, மீதமுள்ள கட்டடம் முழுவதும் இடிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி இன்று மீண்டும் துவங்கி உள்ளது. இடிப்பு பணிகள் இன்று நிறைவு கட்டத்தை எட்டும் என்றும், சுமார் 15 நாட்களாக அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து நாளை முதல் துவங்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.