இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:47 pm

DIN

சென்னை: கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை  சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள் கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மீன்பிடிக் காலம் இப்போது தான் தொடங்கியுள்ள நிலையில் இனிவரும் காலங்களிலும் இதே நிலை தொடர்ந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். எனவே, சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும், அவர்களின் படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்களப்படையினரால் கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும். அத்துடன் இனிவரும் காலங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.