தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு? சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் பேட்டி! 

விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து சசிகலாவை சந்தித்த பின்னர் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் பேட்டியளித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:48 pm

DIN

பெங்களூரு: விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து சசிகலாவை சந்தித்த பின்னர் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் பேட்டியளித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது.அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களே வெளிநடப்பு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில்தான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை,அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார்.அவருடன் அவரது மனைவி அனுராதா, உறவினரான மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோரும் உடன் சென்றார்கள்.

அவர்களுக்கு முன்னதாக அதிமுக எம்.பியும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று காலை சசிகலாவை சந்தித்து பேசினார். தினகரனுடனான சந்திப்புக்கு பிறகு அதிமுக அம்மா அணியின் செந்தில் பாலாஜி உட்பட ஐந்து எம்.எல்.ஏக்களும் சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.

சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது:

விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பொதுச் செயலாளரான சசிகலாதான் முடிவு செய்வார். அதே போல் சசிகலாவுடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து பேசினோம்.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.