ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து, அவர்களது படகையும் சிறைபிடித்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும் காங்கேசன் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.