கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கொசுபிடிக்கும் போராட்டத்தை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள மந்திதோப்பு பகுதியில் சாலையை கடந்து செல்லக்கூட முடியாத அளவிற்குக் கழிவு நீர் தேங்கியிருப்பதால் அங்கே வசிக்கும் பல குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக் கடியால் பலருக்கு டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள், தேங்கியிருக்கும் கழிவு நீரில் கொசுபிடிக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர். மேலும் கழிவு நீரில் காகித கப்பல்களை விட்டும், கோஷங்களை எழுப்பியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மகரம்

”மனநிறைவு! மகிழ்ச்சி!!” கூட்டணி பங்கீடு குறித்து செல்வப்பெருந்தகை!

கன்னத்தில் அறைந்தது போல... தோல்விக்குப் பிறகு மார்க்ரம் பேட்டி!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: தனுசு
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

