காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கொசுபிடிக்கும் போராட்டம்!

கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கொசுபிடிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

News image
Updated On :27 ஜூன் 2017, 5:51 am

DIN

கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கொசுபிடிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள மந்திதோப்பு பகுதியில் சாலையை கடந்து செல்லக்கூட முடியாத அளவிற்குக் கழிவு நீர் தேங்கியிருப்பதால் அங்கே வசிக்கும் பல குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக் கடியால் பலருக்கு டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள், தேங்கியிருக்கும் கழிவு நீரில் கொசுபிடிக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர். மேலும் கழிவு நீரில் காகித கப்பல்களை விட்டும், கோஷங்களை எழுப்பியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.