ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை: மாநிலங்களவை உறுப்பினர் அதிரடி! 

அதிமுகவின் கட்சிப்பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது உள்ளிட்ட உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கோ அல்லது தேர்தல் ஆணையத்திற்கோ எந்த உரிமையும் இல்லை ...

News image
Updated On :2 மார்ச் 2017, 6:25 am

DIN

சென்னை: அதிமுகவின் கட்சிப்பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது உள்ளிட்ட உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கோ அல்லது தேர்தல் ஆணையத்திற்கோ எந்த உரிமையும் இல்லை என்று  அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன். இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:

அதிமுகவின் கட்சிப்பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது இந்த கட்சியின் உள் விவகாரமாகும். அப்படியே அதில் ஏதாவது பிரச்சினை இருந்தாலும் அதை எங்களுக்குள் முடிவு செய்து கொள்வோம். என்னைப் பொறுத்த வரையில் இந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கோ அல்லது தேர்தல் ஆணையத்திற்கோ எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.