ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு!

சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கர்  குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2017, 7:20 am

DIN

சென்னை: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கர்  குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.

சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நக்ஸ்லைட்டுகள் நேற்று கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 12 வீரர்கள் மரணமடைந்தனர். இவர்களில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரும் (36)  ஒருவராவார்.  இவர் ஹவில்தாரராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பலியான சங்கரின் குடும்பதிற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'சட்டீஸ்கரில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கரின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த தொகையை விரைவில் அவரது குடும்பத்திடம் சேர்க்குமாறும் உத்தரவிடப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.