புதுதில்லி: தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர்ந்து 14-வது நாளாக தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
வறட்சியில் வாடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி தமிழகத்தை சேர்ந்த 'தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்' என்ற அமைப்பின் சார்பில் தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர் டெல்லியில் கடந்த 13-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வறட்சி நிவாரணம், வங்கிக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூகநல அமைப்பினர் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தின் 14-ம் நாளான இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இதே ஜந்தர் மந்தர் பகுதியில் இலங்கைத் தமிழர்களுக்காக சுமார் 20 போராட்டங்களை நான் நடத்தி இருக்கிறேன். ஆனால் கழுத்தில் மண்டை ஓடுகளை கட்டிக்கொண்டு, கோவணம் கட்டிக்கொண்டு போராடுவது என்பதெல்லாம் எனக்குத் தெரிந்த வரையில் டெல்லி சரித்திரத்திலேயே கிடையாது.
தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதிநிதிகளாகத்தான் இந்த 300 பேர் இங்கே இருக்கிறார்கள் இங்கே நான் ஒரு விவசாயியாகவே வந்திருக்கிறேன். இவர்களோடு சேர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். நான் கட்சி பற்றி பேசவில்லை.
தமிழக அரசு நிவாரண நிதி தொடர்பாக நிறைய முயற்சிகளை எடுத்தது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து தமிழக விவசாயிகளின் கோரிக்கையை கொடுக்க உள்ளேன். அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் விவசாயிகள் போராட்டத்தை நான் பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


