டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் இன்று வரிகள் மட்டும் பெறப்படும்

மத்திய அரசு தொடர்புடைய வருமான வரி, சேவை வரி, கலால் வரி உள்ளிட்டவற்றைச் செலுத்த வசதியாக பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள் விடுமுறை தினமான புதன்கிழமை (மார்ச் 29) செயல்படும்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:20 am

தினமணி

மத்திய அரசு தொடர்புடைய வருமான வரி, சேவை வரி, கலால் வரி உள்ளிட்டவற்றைச் செலுத்த வசதியாக பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள் விடுமுறை தினமான புதன்கிழமை (மார்ச் 29) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பாரத ஸ்டேட் வங்கி தலைமையக தலைமைப் பொது மேலாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
''இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி வருமான வரி உள்ளிட்டவற்றை பொது மக்கள் செலுத்த வசதியாக கடந்த சனிக்கிழமை (மார்ச் 25), ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) ஆகிய இரண்டு விடுமுறை தினங்களில் தமிழகம்-புதுச்சேரியில் 150 பாரத ஸ்டேட் வங்கிகள் செயல்பட்டன; மொத்தம் 2,800 வரி பண பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இதே போன்று பொது மக்கள் வரி செலுத்த வசதியாக அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள் புதன்கிழமை (மார்ச் 29) செயல்படும்''.
அதிகாரிகள் விளக்கம்: பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை (மார்ச் 29) தெலுங்கு வருடப் பிறப்பு பொது விடுமுறை நாள் என்பதால் வழக்கமான பணப் பரிவர்த்தனைகள் நடைபெறாது.
எனினும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளிலும் வரி செலுத்தும் அரசு சார்ந்த பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.