இந்தியாவிலேயே யாரும் வெளியிடாத அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் நாளை வெளியீடு: மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு!
இந்தியாவிலேயே எந்தஅரசியல் கட்சியும் வெளியிடாத அறிவிப்பு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் நாளை வெளியிடப்படும் ...


சென்னை: இந்தியாவிலேயே எந்தஅரசியல் கட்சியும் வெளியிடாத அறிவிப்பு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் நாளை வெளியிடப்படும் என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மதுசூதனன் போட்டியிடுகிறார். அநத அணியைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் இன்று க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுதுஅவர் கூறியதாவது:
எங்களது அணியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும். இந்தியாவிலேயே எந்தஅரசியல் கட்சியும் வெளியிடாத அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ள எங்களுடைய தேர்தல் அறிக்கையில் இடம பெறும்.
தேர்தல் களத்தை பொறுத்த வரை எங்களது முதல் எதிரி திமுகதான். குடும்ப அரசியலின் ஊற்றுக்கண்ணாக அமைந்திருக்கும் திமுகவை எப்பொழுதும் எதிர்ப்போம்.
இவ்வாறு பாண்டியராஜன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...