டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இனி 'அதிமுக அம்மா சசிகலா அணி' உறுப்பினர்கள் என அழைக்க வேண்டும்: புதுச்சேரி பேரவையில் சலசலப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா அணி என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம், ஓபிஎஸ் அணியைச் சேர்ந் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வியாழ

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:09 pm

தினமணி


புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா அணி என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம், ஓபிஎஸ் அணியைச் சேர்ந் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வியாழக்கிழமை மனு அளித்தார்.

தமிழகத்தில் அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது. தேர்தல் ஆணையம், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை முடக்கி வைத்து உத்தரவிட்டது. மேலும் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா என அக்கட்சியினர் இரு பிரிவாக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா என 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதற்கிடையே புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் மார்ச் 30, 31 ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.

பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்திடம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நடைபெறும் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலைச் சினனத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஓபிஎஸ் அணி அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி எனவும், சசிகலா அணியை அதிமுக அம்மா அணி எனவும் பேரை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது. எனவே புதுச்சேரி சட்டப்பேரவையிலும் அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்.

மேலும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை தாங்கள் பேச அழைக்கும் முன்னரோ வெட்டுப் பிரேரணை தாக்கல் முன்மொழியும் போதோ அதிமுக அம்மா சசிகலா அணி உறுப்பினர்கள் என அழைக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவுடன் தேர்தல் ஆணையத்தின் கடித நகலையும் இணைந்திருந்தார். பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்பு ஓம்சக்தி சேகர் வந்து கோரிக்கை மனு அளித்ததால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.