டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவுக்கு மீண்டும் பதவி

முன்னாள் தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:10 pm

தினமணி

முன்னாள் தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையின் இயக்குநராக வியாழக்கிழமை (மார்ச் 30) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடும் சோதனைகளுக்குப் பிறகு... ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் பி.ராம மோகன ராவ். அவருடைய அலுவலகத்திலும் (தலைமைச் செயலகம்), வீட்டிலும் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சத்துக்கு புதிய நோட்டுகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தலைமைச் செயலர் பதவியிலிருந்த பி.ராம மோகன ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு பி.ராம மோகன ராவுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் தமிழக அரசு மீண்டும் பணி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுவரை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலர்-இயக்குநராக இருந்த கே.ராஜாராமன், நில நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலர்-ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.