சென்னை: மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு வேண்டி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மருத்துவ பொது நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு, மேற்படிப்பில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத மாநில இட ஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம்முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கடந்த 17 நாட்களாக பல்வேரு வகையான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இவர்களது விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் இன்று உயர் நீதின்றத்தில் ஆஜரானார்.அப்பொழுது நீதிபதிகள் தெரிவித்ததாவது:
அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் போராட்டத்தினை முடிவுக்குக்கொண்டு வர, தேவைப்பட்டால் 'எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தினை பயன்படுத்தலாம்.
முதலில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு மற்றொரு முறை அவகாசம் கொடுத்து பேச்சு வார்த்தை நடத்துங்கள். பேச்சு வார்த்தையில் ஒத்து வராவிட்டால் 'எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தினை பயன்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்ந கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு மருத்துவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அதனை அடுத்துபரசு அளித்துள்ள உறுதிமொழியினை ஏற்றும், நீதிமன்றத்தின் அறிவுரைப்படியும் போராட்டம் கைவிடப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


