பிளஸ் 2 தேர்வெழுதிய ஒரே திருநங்கை தாரிகா பாணு தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வெழுதிய ஒரே திருநங்கை தாரிகா பாணு வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளார்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிளஸ் 2 தேர்வெழுதிய ஒரே திருநங்கை தாரிகா பாணு வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தாரிகா பாணு என்ற திருநங்கை பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், அறிவியல் பாடத்தை எடுத்து படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...