பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வடலூர் அருகே முதியவர் மர்ம முறையில் அடித்துக் கொலை

வடலூரில் முதியவர் மர்ம முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 மே 2017, 6:46 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலி: வடலூரில் முதியவர் மர்ம முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடலூர் எம்.கே.கே பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (66). இவர், வடலூர் பேரூராட்சியில் துப்பரவு பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டின் அருகே தலையில் இரத்த காயங்களுடன்  இன்று காலை இறந்து கிடப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி குறிஞ்சிபாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதல்கட்ட விசாணையில் ராஜாங்கம், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் கடந்த 10 தினங்களுக்கு முன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனால், தலைமறைவாக இருந்து வந்தவர் இன்று காலை வீட்டின் அருகே தலையில் காயத்துடன் மர்ம முறையில் இறந்து கிடப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், அப்பகுதியில் வடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.