சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கொடநாடு கொலை வழக்கில் கடைசி குற்றவாளி கைது

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :29 மே 2017, 6:10 am

DIN

நீலகிரி: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், கொடநாட்டில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் காவலாளியாகப் பணியாற்றி வந்தவர் ஓம் பகதூர். இவரைக் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அதிகாலை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தார்.

மேலும், பங்களாவில் உள்ள சில ஆணவங்களும் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், 8 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கடைசி குற்றவாளி தலைமறைவாக இருந்த குட்டி என்ற ஜிதினை போலீசார் இன்று கைது செய்தனர். கேரளாவில் தலைமறைவாக இருந்த ஜிதினை கோத்தகிரி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.