வங்கக் கடலில் உருவான மோரா புயல் வங்கதேசத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:
மோரா புயலால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை. கேரளத்தில் செவ்வாய்க்கிழமை (மே 30) தென்மேற்குப் பருவமழை தொடங்கச் சாதகமான சூழல் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.
இன்று கரையைக் கடக்கும்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மோரா புயலாக மாறியுள்ளது. மோரா புயல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும்.
தற்போது கொல்கத்தா அருகே 600 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

28.2.1976: தமிழகத்தில் புது கல்விமுறை 4 ஆண்டு வரை அமலாகாது

தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருட்டு
கடற்படையில் இணைந்தது 'ஐஎன்எஸ் அஞ்சதீப்' போர்க் கப்பல்

இஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவு
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

