புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சி.எஸ்.ரவீந்திரன் தாற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை சிறையில் கடந்த 2008-ல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு புகார் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி கே.ஜெய பாரதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.