தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கார் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாவு

தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 8:24 pm

DIN

தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராமநாதன் (38). இவர், திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி, நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், மார்க்கம்பட்டியில் தனது உறவினர் இறந்ததை அடுத்து துக்கம் விசாரிப்பதற்காக ராமநாதன், தனது மனைவி சத்தியா (30), மகள் துவாரிகா (8), மகன் நிதின்குமார் (5) ஆகியோருடன் திருப்பூரில் இருந்து காரில் மார்க்கம்பட்டிக்கு வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தார். 
தாராபுரத்தை அடுத்த இடையன்கிணறு அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, அந்த கார் மீது எதிரே பழனியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மோதியது. இந்த விபத்தில், சத்தியா, துவாரிகா, நிதின்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
பலத்த காயமடைந்த ராமநாதன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இதுகுறித்து குண்டடம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.