மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தனியார் காகித ஆலையில் வருமான வரி சோதனை

ஈரோடு மாவட்டம், கொத்தமங்கலம் தனியார் காகித ஆலையில் வருமான வரித் துறையினர் 16 மணி நேரம் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 9:02 pm

DIN

ஈரோடு மாவட்டம், கொத்தமங்கலம் தனியார் காகித ஆலையில் வருமான வரித் துறையினர் 16 மணி நேரம் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் செந்தில் பேப்பர் அன்ட் போர்டு எனும் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக மணல் வியாபாரி ஓ.ஆறுமுகசாமியும், அவரது மகன் செந்தில் இயக்குநராகவும் உள்ளனர். இங்கு 300 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையை தினகரன், சசிகலா தரப்பு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கோவையில் இருந்து வருமான வரித் துறையினர் 6 பேர் காரில் ஆலைக்கு வந்தனர். அங்கு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, போலீஸார் ஆலைக்குள் வெளிநபர்களை அனுமதிக்கவில்லை. சோதனையில் ஆலையின் பிற கிளைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.