புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மண்டபம் அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்! 

ராமேசுவரம் தாலுகா  மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை  சுங்கத்துறை இன்று பறிமுதல் செய்தது.

News image
Updated On :24 நவம்பர் 2017, 3:02 pm

DIN

ராமேசுவரம்: ராமேசுவரம் தாலுகா  மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை  சுங்கத்துறை இன்று பறிமுதல் செய்தது.

ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அருகே உள்ள முயல் தீவு பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் சுங்க இலாகாவினருக்கு இன்று ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சுங்க இலாகா கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒரு இடத்தில் செம்மரக் கட்டைகள் குவியல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிந்தது.

அதில் இருந்த மொத்தம் 30 செம்மரக்கட்டைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த சந்தை மதிப்பு ரூ. 50 லட்சம் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.