சூலூரில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: பொதுமக்கள் முற்றுகை
சூலூர் அருகே நீலாம்பூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சூலூர் அருகே நீலாம்பூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலம்பூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள முதல் தளத்தின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பள்ளி குழந்தைகள் உயிர் தப்பியுள்ளனர்.
பள்ளியின் மேற்கூரை தொடர்பாக கடந்த 17-ம் தேதி தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று பொதுமக்கள் அப்பகுதியில் முற்றுகையிட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இடிந்த மேற்கூரையை ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...