ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பொறையாறு விபத்தில் இறந்தோருக்கு உடனடியாகக் காப்பீட்டுத் தொகை

நாகை மாவட்டம், பொறையாறு விபத்தில் இறந்தவர்களுக்கு பாலிசிகளுக்குரிய இறப்புரிமைத் தொகையை எல்.ஐ.சி. நிறுவனம் உடனடியாக வழங்கியது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:17 pm

DIN

நாகை மாவட்டம், பொறையாறு விபத்தில் இறந்தவர்களுக்கு பாலிசிகளுக்குரிய இறப்புரிமைத் தொகையை எல்.ஐ.சி. நிறுவனம் உடனடியாக வழங்கியது.
இதுகுறித்து எல்.ஐ.சி. தஞ்சாவூர் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறையாறு பேருந்து பணிமனையில் கூரை சரிந்து தொழிலாளர்கள் பலர் இறந்தனர். எல்.ஐ.சி. கும்பகோணம் கிளை - 2 ஊழியர்களும், தஞ்சாவூர் கோட்ட அலுவலக ஊழியர்களும் உடனடியாகக் களத்துக்குச் சென்று ஆறுதல் கூறினர். மேலும், விபத்தில் இறந்த பேருந்து ஊழியர்களில் 6 பேர் பாலிசி வைத்திருந்ததை கணினி மூலம் கண்டறிந்தனர். அவர்கள் வைத்திருந்த பாலிசிகளுக்குரிய இறப்புரிமைத் தொகையை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கத் தொடங்கினர்.
சாதாரணமாக ஒரு நபர் இறந்துவிட்டால் இறப்புரிமம் பெறுவதற்குரிய நடைமுறைகளான இறப்புச் சான்றிதழ் பெறுதல், தேவையான இறப்புரிமப் படிவங்களை நிறைவு செய்தல் ஆகியவை கோரப்படும். இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இந்த நடைமுறைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. மேலும், இறந்த ஊழியர்களில் எல்.ஐ.சி. பாலிசி வைத்திருந்த 6 ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை மாலையே ரூ. 15 லட்சம் அளவிலான உரிமத் தொகை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.