இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வாகனம் ஓட்டுபவர்கள் இன்று முதல் தங்களது ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என்றும் ஒரு உத்தரவை ‘குதிரை பேர’ அரசு பிறப்பித்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்தின் ஆட்சியை சதிகளின் மூலம் சந்தி சிரிக்க வைத்து ஊழலிலும், பேரங்களிலும் முழுவதுமாய் மூழ்கிக் கொண்டிருக்கும் அமைச்சர்களும், முதல்வரும் அரசியல் சட்ட விதிகளை எந்தவித அச்சமும், கூச்சமுமின்றி காலில் போட்டு மிதித்து, பதவியில் வெட்கம், நாணமின்றி ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.