சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் வாழ்ந்த வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரின் வீட்டை நினைவில்லமாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, திருச்சியை அடுத்த முசிறியைச் சேர்ந்த பொறியாளர் தங்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தொடர்ந்த வழக்கில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றக் கூடாது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் வேதா இல்லத்தில் நடைபெற்றுள்ளதால், அதனை நினைவில்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா? உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெயலலிதாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


