மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழக அரசு பெரும்பான்மை விவகாரம்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு! 

சட்டப்பேரவையினைக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:53 pm

DIN

சென்னை: சட்டப்பேரவையினைக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கையினை இழந்து விட்டதாகக் கூறி டிடிவி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அந்த மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் , ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினும் பிற எதிர்கட்சிகளும் சேர்ந்து ஆளுநரிடம் இதே விவகாரம் தொடர்பாக கடிதம் கொடுத்தனர். ஆனால் இந்த கடிதம் குறித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், நேற்று முன்தினம் ஸ்டாலின் சென்னை உயர் நீதின்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

அதில் அவர் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சட்டப்பேரவையினை உடனடியாகக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ரிட் மனு தாக்கல் செய்தார்.

இன்று அந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது, மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.ராமன் எழுந்து, இதே போன்ற கோரிக்கையினை வலியுறுத்தி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். எனவே இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்குமாறு அவர் கோரிக்கை வைத்தார்.

அதற்கு அவர் தரப்பு வாதங்களை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.