மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

100 கிலோ அரிய வகை கடல் அட்டைகளை கடத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :15 செப்டம்பர் 2017, 3:58 pm

ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் அரிய வகை கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மண்டபம் துறைமுகம் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை நடத்திய தீவிர விசாரணையில் 100 கிலோ அரிய வகை கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரின பட்டியலில் இந்த வகை கடல் அட்டைகள் இடம்பெற்றுள்ளன. எனவே இதனை வைத்திருப்பது, கடத்துவது, சட்டப்படி குற்றமாகும்.

எனவே, ராமநாதபுரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த பி.செல்வராஜ் என்பவர் இந்த 100 கிலோ அரிய வகை கடல் அட்டைகள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசராணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.