பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பதவி! 

மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை நியமித்து மத்திய அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பதவி! 
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை நியமித்து மத்திய அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருப்பவர் தமிழிசை சவுந்திரராஜன். இவருக்கு மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் புதிய பதவியை மத்திய அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் கீழ் இயங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக  டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை நியமிக்கப்படுகிறார்.

இந்த புதிய பொறுப்பு அறிவிப்பானை வெளியிடும் நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு தமிழிசை அந்தப் பதவியில் நீடிப்பார்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இன்றைய தேதியிட்டு புதிய பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் தமிழிசை இன்று முதல் அந்தப் பொறுப்பிற்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com