தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தலை திணிப்பது தேவையற்றது : தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தலை திணிப்பது தேவையற்றது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். குடியாத்தத்தில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: 

News image
பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
Updated On :29 ஜனவரி 2024, 5:41 pm

DIN

தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தலை திணிப்பது தேவையற்றது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். 
குடியாத்தத்தில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: 
இன்றைய சூழ்நிலையில் அதிமுக பிளவுபட்டுள்ளது. தற்போது நடந்து வரும் ஆட்சியில் பாஜக தலையீடு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவறு. 18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கத்துக்கும், பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 
தமிழக அரசின் நலத் திட்டங்களை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடந்து ஒன்றேகால் ஆண்டு ஆகிறது. மீண்டும் தேர்தலை திணிப்பது தேவையற்றது என கருதுகிறேன். ஆனால் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். 
நீட் தேர்வை மாணவர்களே ஒப்புக் கொண்ட நிலையில், சிலர் குழப்பிக் கொண்டுள்ளனர் என்றார். இதையொட்டி, நகர பாஜக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்டத் தலைவர் கொ. வெங்கடேசன், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் எஸ்.தோன்றல் நாயகன், வாசுதேவன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, நகரத் தலைவர் பி. ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
தொடர்ந்து, சூரியோதயா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தூய்மையே சேவை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். 
நிகழ்சிச்சிக்கு, பள்ளித் தாளாளர் பிலிப்பக்த பிரசன்னா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெனீப்பர் பிலிப் வரவேற்றார். இதில், தமிழிசை சௌந்தரராஜன் உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்களும், மாணவர்களும் உறுதிமொழியை ஏற்றனர்.
இதைத் தொடர்ந்து, அவர் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் உள்ள உத்தர ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.