கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று சொன்னோமே தவிர கட்சி மீது அல்ல: தினகரன் தரப்பு வாதம்

தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று சொன்னோமே தவிர, கட்சிக்கு எதிராக சொல்லவில்லை என்று தினகரன் தரப்பு வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கூறியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:41 pm

DIN


சென்னை: தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று சொன்னோமே தவிர, கட்சிக்கு எதிராக சொல்லவில்லை என்று தினகரன் தரப்பு வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர்  தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.

உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதங்களை முன் வைக்கின்றனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் தரப்பில் வழக்குரைஞர் ராகேஷ் திவேதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் சார்பில் அரிமா சுந்தரம் ஆஜராகியுள்ளார். அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித் ஆகியோர் ஆஜராகினர்.

முதலில், தினகரன் தரப்பில் ஆஜரான துஷ்யந்த் தவே தனது வாதங்களை எடுத்துரைத்தார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது. அரசியல் சாசன விதி மீறப்பட்டுள்ளது.  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மேலும், எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க அவைத்தலைவர் தனபால் போதிய கால அவகாசமும் அளிக்கவில்லை என்றும் வழக்குரைஞர் தவே கூறினார்.

மேலும் அவர் தனது வாதத்தில், கொறடா உத்தரவை மீறாத நிலையில் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசை எதிர்த்த ஓபிஎஸ்-க்கு பதவி, கருத்துக் கூறிய எங்களுக்கு தகுதி நீக்கமா?

ஊழல் மிகுந்த அரசாக இருப்பதால் முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றோம் என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.