விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜெயலலிதா அப்பல்லோ சிகிச்சை சிசிடிவி காட்சிகள்: பிரதாப் ரெட்டி முக்கிய தகவல்! 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள்  பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படுமென்று நிறுவனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 செப்டம்பர் 2017, 8:12 am

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள்  பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படுமென்று நிறுவனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக தற்பொழுது வித விதமான தகவல்கள் பரவி வருகின்றன. முதலில் சிகிச்சையின் பொழுது ஜெயலலிதா தொடர்பாக நாங்கள் கூறிய தகவல்கள் எல்லாம் பொய் என்று மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் அது தொடர்பாக ஒவ்வொரு அமைச்சரிடம் இருந்தும் மாறுபட்ட தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் சிகிச்சையின் பொழுது ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலா வீடியோ எடுத்தார் என்று டிடிவி தினகரன் தெரிவித்து பரப்பரப்பைக் கிளப்பினார்.

தொடர்ந்து சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில் அப்பொழுது போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கயில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட வேண்டுமென்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அதன் நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர், 'ஜெயலலதாவுக்கு எங்களால் இயன்ற வரை 100% சிறப்பான உயர்தர சிகிச்சை அளித்தோம். அவருக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.  

அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஹரிப்ரசாத், 'சிகிச்சை தொடர்பாக நடக்கும் எந்த விதமான விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்’  என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.