ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதா அப்பல்லோ சிகிச்சை சிசிடிவி காட்சிகள்: பிரதாப் ரெட்டி முக்கிய தகவல்! 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள்  பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படுமென்று நிறுவனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 செப்டம்பர் 2017, 8:12 am

DIN

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள்  பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படுமென்று நிறுவனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக தற்பொழுது வித விதமான தகவல்கள் பரவி வருகின்றன. முதலில் சிகிச்சையின் பொழுது ஜெயலலிதா தொடர்பாக நாங்கள் கூறிய தகவல்கள் எல்லாம் பொய் என்று மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டம் ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் அது தொடர்பாக ஒவ்வொரு அமைச்சரிடம் இருந்தும் மாறுபட்ட தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் சிகிச்சையின் பொழுது ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலா வீடியோ எடுத்தார் என்று டிடிவி தினகரன் தெரிவித்து பரப்பரப்பைக் கிளப்பினார்.

தொடர்ந்து சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில் அப்பொழுது போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கயில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட வேண்டுமென்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அதன் நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர், 'ஜெயலலதாவுக்கு எங்களால் இயன்ற வரை 100% சிறப்பான உயர்தர சிகிச்சை அளித்தோம். அவருக்கு அப்பல்லோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் பற்றி, பின்னர் முறையாக தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.  

அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஹரிப்ரசாத், 'சிகிச்சை தொடர்பாக நடக்கும் எந்த விதமான விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்’  என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.