கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன்: நாஞ்சில் சம்பத்

அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2017, 2:20 am

DIN

சென்னை: அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சென்னையில் டி.டி.வி. தினகரன் அடையாறு இல்லத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு அதிமுக அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தினகரன் தலைமையில் தான் அதிமுக செயல்படும். இந்தக் கட்சியை வலுவோடும் பொலிவோடும் தினகரன் வழி நடத்துவார்.

தில்லியில் இருக்கும் பாஜகவின் அற்பத்தனமான மிரட்டுலுக்கு பயந்து ஆதாயச் சூதாடிகள் எடுக்கிற முடிவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது.

அதிமுக உடையவில்லை. ஜெயக்குமாரை நிதி அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்ததே தினகரன் தான். தினகரன் தலைமையில் அதிமுக விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.