காலமானார் கே.நாச்சம்மாள்

தி சென்னை சில்க்ஸ் குழும நிறுவனர் குழந்தைவேல் முதலியாரின் மனைவி நாச்சம்மாள் (86) திங்கள்கிழமை காலமானார்.

தி சென்னை சில்க்ஸ் குழும நிறுவனர் குழந்தைவேல் முதலியாரின் மனைவி நாச்சம்மாள் (86) திங்கள்கிழமை காலமானார்.
தி சென்னை சில்க்ஸ் குழுமத்தை நிறுவியவர் ஏ.குழந்தைவேல் முதலியார். இவர், திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள தேவராயம்பாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது மனைவி நாச்சம்மாள். இத்தம்பதிக்கு 8 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.
தனது மகனும், தி சென்னை சில்க்ஸ் திருப்பூர் கிளையின் மேலாண்மை இயக்குநருமான சிவலிங்கத்துடன் திருப்பூரில் நாச்சம்மாள் வசித்து வந்தார். இந்நிலையில், முதுமை காரணமாக திங்கள்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர், அவிநாசி, தேவராயம்பாளையம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ள குழந்தைவேல் முதலியாரின் சமாதிக்கு அருகிலேயே நாச்சம்மாள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com