

டிடிவி தினகரனின் பண்ணை வீடு, காகித ஆலையில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கைபற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் புதுச்சேரி அருகே ஆரோவில்லில் உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீடு, ஈரோடு மாவட்டம், கொத்தமங்கலத்தில் காகித ஆலையிலும் வருவானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.