எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அனிதாவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்பு

நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடல் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், குழுமூரில் சனிக்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2017, 3:16 am IST

நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடல் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், குழுமூரில் சனிக்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.
அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வினால் மருத்துவம் படிக்க முடியவில்லையே என விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் வீட்டின் அருகேயுள்ள திடலில் வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தியதையடுத்து சனிக்கிழமை இரவு 10.40 மணிக்கு திருச்சி சரக டிஐஜி பவானிஸ்வரி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார் ஆகியோர் தலைமையிலான அதிவிரைவுப்படை போலீஸார் பாதுகாப்புடன், மயானத்துக்கு அனிதாவின் உடல் ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு 11.30 மணியளவில் எரியூட்டப்பட்டது.
வழிநெடுகிலும் பொதுமக்களும், மாணவர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்லவத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.