காவிரி வாரியத்துக்காக சென்னை மெரினாவில் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநாவுக்கரசர், திருமாவளவன், கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
மறியலை தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அண்ணாநினைவிடம் நோக்கி பேரணியாக புறப்பட்ட ஸ்டாலின் அங்கும் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அண்ணாசாலை - வாலாஜா சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இதையடுத்து தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக கூறி மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









