எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

காவிரி வாரியத்துக்காக மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது

காவிரி வாரியத்துக்காக சென்னை மெரினாவில் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 11:24 am IST

காவிரி வாரியத்துக்காக சென்னை மெரினாவில் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநாவுக்கரசர், திருமாவளவன், கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் இதில் பங்கேற்றனர். 

மறியலை தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அண்ணாநினைவிடம் நோக்கி பேரணியாக புறப்பட்ட ஸ்டாலின் அங்கும் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அண்ணாசாலை - வாலாஜா சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

இதையடுத்து தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக கூறி மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.